சதாரா மாவட்டத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கௌஸ் பீடபூமி மற்றும் ஏரிப்பகுதி ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடந்தோறும் ஈர்க்கிறது. ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக புகழ் பெற்றுள்ள இது மலர்களின் பீடபூமி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பீடபூமிப்பகுதி 3500 அடி உயரத்தில் உள்ள இந்த பீடப்பூமிப்பகுதி 150 வருடங்களுக்குமுன் 1844ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இப்பிரதேசம் அற்புதமான இயற்கை அழகோடு காட்சியளிக்கின்றது.
இங்கிருந்து கொய்னா காட்டுயிர் சரணாலயத்தையும் பார்க்க முடிகிறது. 400 வகைகளுக்கும் மேற்பட்ட தாவரங்கள், மூலிகைச்செடிகள் போன்றவை இங்கு நிறைந்துள்ளன.
கௌஸ் ஏரி சதாரா நகரத்துக்கான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான நீராதாரமாக விளங்குகிறது. மழைக்காலம் முடிந்த பிறகு இப்பகுதி ரசிப்பதற்கு உகந்ததாக உள்ளது.



Click it and Unblock the Notifications