சாயி பாபாவின் தீவிர மான பக்தர்களில் ஒருவரான அப்துல் பாபா வசித்த இந்த நினைவகம் ஷிர்டிக்கு வரும் பக்தர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்த குடிலில் பாப வாழ்ந்த காலத்தின் ஞாபகார்த்தமாக பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பச்சை நிறம் பூசப் பட்டுள்ள இந்த சிறிய குடில் ஷிர்டி சாவடி நேர் எதிரே அமைந்துள்ளது.
இந்த குடிலில் உள்ள பிரதான அறையில் பாபா மற்றும் அப்துல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவாமி சின்மயான்ந்தாவுடன் பாபா இருக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது. இந்த குடிலின் பின்புறம் லட்சுமி பாய் வீடு வரை செல்லும் ஒரு சிறு பாதையும் உள்ளது.
அப்துல் பாபா குடிலை காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை காணலாம்.