ஷிர்டியின் அருகில் உள்ள ஒரு புனித இடம் இந்த குருஸ்தான். பாபாவிற்கு பதினாறு வயது ஆகும்போது அவர் முதல் முதலாக இங்கிருந்த ஒரு வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து உலகிற்கு காட்சி அளித்தார். அந்த மரம் மர்கோஸா என்று அழைக்கப்படுகிறது. மேலும் அந்த மரம் இருந்த இடமே இந்த குருஸ்தான் என்று புனித இடமாக பின்னாளில் மாறியது.
பாபாவின் பக்தர்கள் இந்த இடத்தில் ஊதுவத்திகளை ஏற்றி வைத்தால் தீராத பிணியெல்லாம் தீரும் என்று நம்புகின்றனர். இந்த இடத்தில் ஒரு சிறிய கோயில் மாடமும் அதனுள் பாபாவின் படமும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த இடத்தை காலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications