சாத்ரி என்று அழைக்கப்படும் நினைவு மாடங்கள் ஒருவகை கல்லறை நினைவுச்சின்னங்களாகும். ஆனால் இந்த மாடங்களில் மாண்டவர் உடலோ அல்லது அஸ்தியோ புதைக்கப்பட்டிராது.
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவு மாடங்கள் என்பவை ஆதி காலத்திலிருந்தே மனித நாகரிகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இறந்தவரின் நினைவாக எழுப்பப்படும் நினைவுச்சின்னத்தை குறிக்கும் ‘செனடாப்’ எனும் சொல் ஆதி கிரேக்க மொழியிலிருந்து பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஷிவ்புரி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சாத்ரி நினைவு மாடங்கள் சிந்தியா ராஜ வம்சத்தினருக்காக எழுப்பப்பட்டவையாகும். வெண்பளிங்குக்கற்களால் கட்டப்பட்டுள்ள இம்மாடங்கள் அற்புத கலைச்சின்னங்களாக காலத்தில் நீடித்து வீற்றிருக்கின்றன.
ஏரியின் இரு புறத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் ரம்மியமான முகலாய பாணி தோட்டப்பூங்காக்களில் இந்த நினைவு மாடங்கள் காணப்படுகின்றன. மாதவ ராவ் சிந்தியா மற்றும் மஹாராணி சாக்யா ராஜே சிந்தியா அகியோருக்கு இந்த நினைவு மாடங்கள் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன.