Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சீர்காழி » வானிலை

சீர்காழி வானிலை

சீர்காழிக்குச் செல்ல சிறந்த காலமாக கருதப்படுவது அக்டோபருக்கும் பிப்ரவரிக்கும் இடைப்பட்ட நாட்களே. இக்காலத்தில்தான் இதமான வெப்பநிலை நிலவி, பயணம் மேற்கொள்ளவும், இடங்களைச் சுற்றிப்பார்க்கவும் களைப்பை ஏற்படுத்தாமல், வசதியாக இருக்கும். மேலும் பல மத சம்பந்தமான பண்டிகைகளும் விழாக்களும், இக்காலத்தில்தான் கொண்டாடப்படுகின்றன.

கோடைகாலம்

வங்காள விரிகுடாவின் கிழக்குக் கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளதால், வெப்பமும் ஈரப்பதமும் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது. கோடைகாலத்தில் காலநிலை மிக வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் உள்ளது. கோடையில் சில நேரங்களில் மிக வறட்சியும் நிலவும். வெப்பநிலையானது 22℃ முதல் 35℃ வரை இருக்கும். மார்ச் மாதம் இதமாக இருந்தாலும், ஏப்ரல் மாதம் வெம்மை அதிகமாகவும், மே மாதத்தில் கடும் வெப்பமாகவும் உள்ளது. இக்காலத்தில் சீர்காழிக்கு செல்வது உசிதமல்ல.

மழைக்காலம்

ஜூன் மாத மத்தியில் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் இறுதி வரை நீடிக்கிறது.  இக்காலத்தில் மிக அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது. வெப்பநிலை நன்கு குறைந்து இதமான காலநிலை நிலவுகிறது. சீர்காழியிலுள்ள கோவில்கள் மழையினால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரையான காலம் இங்கு குளிர்காலமாகும். எனினும்,  குளிர்காலம் மிகக் குளிராக இருப்பதில்லை. இங்கு குளிர்காலம் இதமான மற்றும் மிதமான குளிருடன் நீடிக்கிறது. வெப்பநிலையானது 15℃-28℃ வரை நிலையாக உள்ளது. ஜனவரியில் அதிக குளிர் உணரப்படுகிறது.