கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் கட்டழகர் கோவில் மலை உச்சியில் மகத்துவமாக காட்சி அளிக்கின்றது.
பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடத்தில் அது அமைந்து இருக்கின்றது. இது சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகவும், வழிபடுவதற்கு புனிதமான இடமாகவும் கருதப்படுகின்றது.
மேலும் இக்கோவிலில் ஒரு நீரூற்று இருக்கிறது, அதன் நீர் கீழ்நோக்கி மாத்திரமே செல்கின்றது. அக்காட்சி காண்பவர் மனதை கொள்ளைகொள்கின்றது. வார இறுதிகளில் பக்தர்கள் வருகைக்காக இக்கோவில் திறந்து வைக்கப்படுகின்றது.
காட்டினுள் ஆறு கிலோமீட்டர்கள் நடந்து சென்று இந்த தெய்வத்தை தரிசிக்கலாம்,. இக்கோவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து இருக்கும்.