தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பத்தூர் என்னும் ஊரிலுள்ள இந்து வழிபாட்டுத்தலம் வீற்றிருந்த பெருமாள் ஆலயம் ஆகும். இது ஒரு விஷ்ணு கோவிலாகும். பதிவு பெற்ற சான்றுகள் ஏதுமில்லையாயினும், இக்கோவிலானது கி.பி. 850 ஆம் ஆண்டு பல்லவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ராஜராஜ சோழனும், கிருஷ்ணதேவராயரும், இக்கோவிலைப் புதுப்பித்தனர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஒரு பழைய கோவிலின் மீது இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அப்பழைய கோவிலின் செங்கற்களால் ஆன இடிபாடுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.
இந்த இடிபாடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பழமையானவை. மேலும் இன்றும் நிலைத்துநிற்கும் பல்லவகாலத்திற்கு முந்தைய இரண்டு இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
முனைவர். ட்டி. சத்தியமூர்த்தி என்னும் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளரின் கூற்றுப்படி இக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும், கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், இக்கோவிலில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களைப் பிணைக்கப் பயன்பட்டுள்ள காரையானது இன்னும் பலமாக செங்கற்களை பிணைத்துக் கொண்டுள்ளதைக் காணும்பொழுது இக்கோவிலைக் கட்டிய கலைஞர்களின் கட்டிட நுணுக்கம் நன்கு புலனாகிறது.