தலக்காடு நகரத்துக்கு வருகை தரும் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு கோயில் இந்த மல்லிகார்ஜுனா கோயிலாகும். இது பிரம்மராம்பிகை தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மல்லிகார்ஜுன ஸ்வாமியின் சிறிய லிங்கமும் காணப்படுகிறது. நெருங்கிப்பார்த்தால் இந்த லிங்கத்தின் மீது சில சுவடுகளைப்பார்க்கலாம். இந்த தடங்கள் காமதேனுப்பசுவினுடையவை என்று ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. சந்தியா கணபதி, வீரபத்ரர் மற்றும் சாமுண்டீஸ்வரி சன்னதிகளும் இந்த கோயில் வளாகத்தில் உள்ளன.
பஞ்சலிங்க தரிசன திருநாளின் போது இந்த மல்லிகார்ஜுன கோயிலுக்கும் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இங்கு வைத்தியநாத ஸ்வாமி கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது.
இதுதவிர ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இந்த கோயில் ஸ்தலத்தில் ஒரு விவசாய சந்தையும் நடைபெறுகிறது. இந்த சந்தை நடைபெறும் காலத்திலும் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மல்லிகார்ஜுனா கோயிலுக்கு அருகிலுள்ள அனாதி வைகுந்த நாதர் கோயில் மற்றும் வீர ஆஞ்சநேய கோயில் போன்றவற்றுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications