திருநாகேஸ்வரத்திலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் கோவில். பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும்.
பூமாதேவி அவதரித்த தலம் இதுவாகும். இங்கு வழிபடும் முதன்மை கடவுள் மகாவிஷ்ணு ஆவார். மகாவிஷ்ணு இங்கு ஒப்பிலியப்பன் என்னுப் பெயரில் வணங்கப்படுகிறார். அவர் இங்கு தனது தேவியான பூமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.
இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும். நாகநாதசுவாமி ஆலயம் இக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யங்கள் உப்பு இன்றியே சமைக்கப்படுகின்றன. யாராவது வேண்டுமேன்றே உப்பு சேர்த்த உணவுப்பொருள்களைப் பெருமாளுக்குப் படைத்தால் அது குற்றமாகவும் பாவமாகவும் கருதப்படும்.
இக்கோவிலுக்கு வந்து பெருமாளையும் பூமாதேவியையும் வணங்கினால், அவர்களது குடும்பத்தில் கணவன் மனைவியர் இருவருக்கிடையில், சகிப்புத்தன்மை பெருகி இருவரிடையேயும் அன்னியோன்யம் அதிகரித்து மணவாழ்வில் இன்பம் வளருமாம்.
தமிழ் மாதங்களான ஐப்பசி(அக்டோபர்-நவம்பர்), புரட்டாசி(செப்டம்பர்-அக்டோபர்), பங்குனி( மார்ச்-ஏப்ரல்)யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் முக்கியமான திருவிழாவாகும்.



Click it and Unblock the Notifications