கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர்.
தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்
தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோவில் கட்டமைப்பின் பெருமைகளை உணர்ந்த யுனஸ்கோ அமைப்பு, இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகரை எளிதில் சென்றடைய முடியும்.
தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஐராவதம் கோவில் என இவ்விரண்டையும் சோழர்களே கட்டியிருப்பதால், இவ்விரு கோவில் வடிவமைப்புகளிலும் பல ஒற்றுமைகளை காண முடியும்.
தாராசுரம் நகரின் வானிலை
தாராசுரம் ஒரு வெப்பமண்டலம். ஆதலால், வெயில் அதிக அளவு இருக்கும் ஊர் தாராசுரம். பெரும்பாலும், வருடம் முழுவதும் வெப்பமாகவே இருக்கும் தாராசுரம் நகருக்கு சுற்றுலா வருபவர்கள் வெயிலுக்கு ஏற்ற காட்டன் போன்ற உடைகளை கொண்டு வருவது சிறந்தது.
தாராசுரம் நகரை அடைவது எப்படி?
கும்பகோணத்திலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலமாக தாராசுரம் நகரை சென்றடையலாம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு வழக்கமாக செல்லும் ரயில்கள் பயணத்தை எளிமையாக்கும்.