கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய விசித்திரமான கிராமம் தான் பட்டீஸ்வரம்.பட்டி என்பது காமதேணுவின் கன்றின் பெயர்.
ஒருகாலத்தில் தினமும் இவ்வூரில் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளது பட்டி என்ற காமதேணு. ஆகையால், இந்த ஊருக்கு பட்டீஸ்வரம் எனும் பெயர் உண்டாயிற்று என்று புராணம் கூறுகிறது.
பட்டீஸ்வரத்தில் பிரபலமான துர்கை அம்மன் கோவில் உள்ளது. பல்லவ, சோழர் மற்றும் நாயக்கர் கால கட்டமைப்புக்களோடு இக்கோவில் திகழ்வதால், பல்வேறு கால கட்டங்களில் இக்கோயில் புணரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்பது விளங்கும்.
மேலும், இராமபிரான், இராவணனைக் கொன்ற பாவத்தை களைய, இவ்விடத்திற்கு வந்து மூன்று சிவலிங்கங்களை வைத்து வழிபட்டார் என்று கூறுவர். அதுமட்டுமல்லாமல், சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்வதற்காக, இராமர் இங்கு ஒரு கிணற்றை அமைத்ததாகவும், அக்கிணற்றிற்கு தனுஷ்கோடியில் இருந்து நேரடியாக தண்ணீர் வந்ததாகவும் கூறுவர். தாராசுரம் நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பட்டீஸ்வரத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உண்டு.