'திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர் பெற்றது.
துணை கிடைக்காத தனி நபர்கள் திருமணச்சேரி கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். திருமணச்சேரி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் தான். நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் சிற்பக்கலை அம்சம் மிகுந்த கோவில் நகரம் தான் இந்த திருமணச்சேரி.
சாலை மார்க்கமாகவும், தொடர்வண்டி மூலமாகவும் இந்த பட்டணத்தை எளிதில் அடையலாம். மயிலாடுதுறை சந்திப்பு மற்றும் கும்பகோணம் ரயில் நிலையம் ஆகியவை இந்த நகரத்திற்கு அருகாமையில் இருக்கின்றன. சாலை பாதையும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.
சென்னையில் இருந்து புதுச்சேரி-கூடலூர் சாலை வழியாக திருமணச்சேரியை அடையலாம். ஆண்டு முழுவதும் திருமணச்சேரியின் வானிலை சிறப்பாக இருப்பதால், எல்லா காலங்களிலும் இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்.