சிவராமபுரம் அக்ரஹாரம் திருமணச்சேரி கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். அக்ரஹாரங்கள் என்பவை தனித்துவம் மிக்க பிராமண சமுதாயத்தினரின் கிராமங்கள் ஆகும். அவை ஒன்றன் பின் ஒன்றாக கட்டப்பட்டு இருக்கின்றன.
ஒரு வீட்டின் சுவர் பக்கத்து வீட்டிற்கும் சுவராக இருக்குமாறு அமைந்துள்ளன. சிவபுரம் அக்ரஹாரமும் இதில் விதிவிளக்கு அல்ல. வட தெற்கு திசையில் வீடுகள் கட்டப்பட்டு, ஒரு முணையில் மகா விஷ்ணுவின் கோவிலும், மறு முணையில் சிவபெருமானின் கோவிலும் இருக்குமாறு அமைந்துள்ள இக்கிராமம் தமிழ் கட்டிடக்கலைக்கு சிறப்பான உதாரணம் ஆகும்.
அக்ரஹாரம் என்கிற வார்த்தையே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூமாலையை குறிக்கின்றது. இதே காரணத்திற்காக இந்த கிராமம் கடவுளுடைய உடலை அலங்கரிக்கும் மாலையின் வடிவத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வரும் கடினமான கிராம கட்டிடக்கலையை புரிந்துகொள்ள சிவராமபுரம் அக்ரஹாரத்துக்கு வருகை தருவது பரிந்துரைக்கப்படுகின்றது.