திருவண்ணாமலையின் புறநகர் பகுதியில் அமைந்து இருக்கும் பச்சையம்மன் கோவில் ஒரு பழமைவாய்ந்த கோவில். இக்கோவில் குறைந்தபட்சம் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது, எனினும் இதன் தற்போதைய கட்டிடம் 120 ஆண்டுகள் மாத்திரமே பழமையானது.
சிவபெருமானின் துணைவியாகிய பார்வதி தேவி இக்கோவிலில் பச்சையம்மனாக வழிபடப்படுகின்றார். தேவியின் இந்த வடிவம் உலக சமாதானத்தையும் பகையின்மையையும் உருவாக்க படைக்கப்ப்ட்டதாக நம்பப்படுகின்றது.
1905 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் கொள்ளைநோய் பரவியபோது, ஸ்ரீ ரமண மகரிஷி ஆறு மாதங்கள் இக்கோவிலில் தஞ்சம் புகுந்தார் என்று நம்பப்படுகின்றது. விருபக்ஷா குகையில் இருந்து இக்கோவிலுக்கு வந்ததன் மூலம் மகரிஷி நோய்தாக்கத்தில் இருந்து தப்பினார்.
மகான்களுடைய புனித பாதையை பின்பற்றி நடக்கும் பிரதக்ஷினா நடையை நடக்கிற மக்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இக்கோவில் உள் பாதையில் இருப்பதால், வெளி பாதையில் இருந்து இதை அணுக முடியாது.
மகரிஷி விருபக்ஷா குகைக்கு சென்ற பிறகு, தொடர்ச்சியாக எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள இக்கோவிலுக்கு வருவார்.



Click it and Unblock the Notifications