1585 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள மன்மந்திர் படித்துறை, அதனை அமைத்தவரான, தற்போது அஜ்மர் என்றழைக்கப்படும் ஆம்பரைச் சேர்ந்த, சவை ராஜா மன் சிங் அவர்களின் பெயரைக் கொண்டு இவ்வாறு வழங்கப்படுகிறது.
இப்படித்துறை முன்பு சோமேஷ்வர் படித்துறை என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இங்கு மஹாராஜா ஜெய் சிங் அவர்களால் 1730 வாக்கில் நிறுவப்பட்ட ஆய்வுநிலையம் ஒன்றும் உள்ளது. இதே ராஜா தான் தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான ஜந்தர் மந்தரையும் கட்டியுள்ளார்.
இந்த ஆய்வுநிலையம் அருமையான ஜன்னல் வார்ப்புகளைக் கொண்டுள்ளது. இப்போதும் கூட நல்ல நிலையில் இருக்கும் நான்கு வானியல் சாதனங்களைக் கொண்டு அக்காலத்திலேயே வானியல் சாஸ்திரம் குறித்த ஞானத்தைப் பற்றிய தெளிவை உண்டாக்கக்கூடியதாக இந்நிலையம் இருந்துள்ளது.
இந்நிலையம் 1850 ஆம் ஆண்டில் முதன்முதலாகவும், பின்னர் 1912 ஆம் ஆண்டில் மீண்டும் ரஜபுத் மன்னர்களால் புனரமைக்கப்பட்டுள்ளது.
மன்மந்திர் படித்துறை, ஸ்தூலதந்த விநாயகா, ராமேஷ்வரா மற்றும் சோமேஷ்வரா போன்ற பல்வேறு முக்கிய ஆலயங்களைக் கொண்டுள்ள பெருமை பெற்றதாக விளங்குகின்றது.
இங்குள்ள சோமேஷ்வரா கோயிலில், குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் இருப்பதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ள சோமேஷ்வர லிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பபட்டுள்ளது. இந்த லிங்கம் இந்தியாவில் உள்ள பிரபலமான ஒன்பது ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாக நம்பப்படுகிறது.