அஷ்டபுஜா தேவி கோயில், அதன் பெயரே உணர்த்துவது போல், கிருஷ்ண பகவானின் வளர்ப்புத் தாயான யஷோதாவின் மகளாகிய அஷ்டபுஜா தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
அஷ்டபுஜா தேவி, மதுராவின் அசுர குல அரசனாகிய கம்சனின் கோரப் பிடியிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து, விந்தியாஞ்சல் மலைகளில் இருந்த ஒரு சிறு குன்றின் மேல் வந்து இறங்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
இந்த கம்பீரமான கோயில் விந்தியாஞ்சல் மலை உச்சியில் பொதிந்துள்ளது. அஷ்டபுஜா தேவி கோயில் மேற்கூறிய நிகழ்வினை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது விந்தியவாசினி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள மற்றொரு முக்கிய கோயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கம்பீரமான மலைத்தொடரை பின்னணியில் கொண்டு அமைந்திருக்கும் இக்கோயில், அதன் அமைதியான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறங்களால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இதன் புகழ் ஓங்கி இருந்த காலத்தில், மன்னர்கள் பலர் தங்கள் எதிரிகளை வெற்றி கொள்ளவும், தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தாந்திரீகர்களின் உதவியோடு ரகசியமான பூஜைகள், ய்க்ஞங்கள் மற்றும் சடங்குகளை நடத்தும் அபிமான இடமாக இது இருந்துள்ளது.



Click it and Unblock the Notifications