கோவர்தனின் புகழ்பெற்ற குளங்களில் குசும் சரோவரும் ஒன்றாகும். குசும் என்றால் பூக்கள் என்ற பொருளில் இந்த குளத்தைச் சுற்றி பூக்கள் பூப்பதால் இப்பெயர் பெற்றது. கோபியர்கள் இங்கு பூக்கள் பறித்துவிட்டு கிருஷ்ணருக்காக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
புனித குளத்தில் இருந்து அரைமணி நேர தொலைவில் அமைந்திருக்கிறது ராதா குண்டம். குசும் சரோவர் 450அடி நீளமும், 60அடி ஆழமும் கொண்டதாகும்.
இக்குளத்தைச் சுற்றி அனைத்துப் பக்கங்களிலும் படிகள் அமைந்துள்ளது. கிருஷ்ணருக்குப் பிடித்த கடம்ப மரத்தால் இக்குளம் சூழப்பட்டுள்ளது.
அங்கு காணப்படும் பதிவுகளில் பழைய அரச பரம்பரை ஒன்றின் உறுப்பினர்களின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. சுற்றிலும் நிறைய சிறிய கோவில்களும், ஆசிரமங்களும் அமைந்துள்ளன. மாலை வேளைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். ரம்மியமான சூழலின் நடுவே வழிபாடு நடத்த இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.