ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இங்குள்ள தேயிலை தோட்டங்கள், அணி மற்றும் ஏரிக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.
ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காக பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
பரந்து நீளும் வனப்பகுதியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேயிலை தோட்டங்களும் இந்த ஸ்தலத்தை சூழ்ந்துள்ளன. இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். பொத்தன்மேடு சுற்றுலா ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் முடித்துவிடுவது சிறந்தது.
பசும் போர்வைகள் போன்ற தேயிலை தோட்டங்கள், பாம்புபோல் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் பசுமையான வனப்பகுதிகள் போன்றவை இந்த இடத்தை எழில் மிகுந்த சிற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.
தங்கி ஓய்வெடுத்து ரசிப்பதற்கேற்றவாறு இங்கு பல ரிசார்ட் விடுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் ஓரிரு நாட்கள் தங்கி இப்பிரதேசத்தின் அழகை நிதானமாக ரசிக்க முடிந்தால் அது நிச்சயமாக நம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடைய வைக்கும்.