ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது.
மூணாருக்கும் பள்ளி வாசலுக்கும் இடையே அமைந்துள்ளதால் பள்ளிவாசலுக்கும் செல்லும்போதே பயணிகள் இந்த ஆட்டுக்கல் எனும் நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கும் விஜயம் செய்யலாம்.
நிசப்தம் தவழும் இந்த ஆட்டுக்கல் பிரதேசமானது செழிப்பான மலைகள் மற்றும் தூய்மையான இயற்கை அழகுடன் நிரம்பி வழிகிறது. இங்குள்ள நீர்வீழ்ச்சியை சுற்றிலும் நிறைய மலையேற்றப்பாதைகள் காணப்படுவதால் இந்த இடம் மலையேற்றப்பிரியர்களுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கும்.
மழைக்காலம் முடிந்த உடனே இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்வது நல்லது. அச்சமயம் நீர்வரத்து இருப்பதோடு புத்தம்புது பசுமையும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
வெகு தூரத்திலிருந்தே கேட்கும் நீர்வீழ்ச்சியின் ஓசை மற்றும் காட்டின் அமைதி போன்றவை இந்த ஸ்தலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களாகும்.
ஆட்டுக்கல் பகுதியில் சீயப்பாறா நீர்வீழ்ச்சி மற்றும் வளரா நீர்வீழ்ச்சி போன்ற இதர நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன. அருவியில் நனைந்து குளிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு சீயப்பாறா நீர்வீழ்ச்சி மிகப்பிடித்தமானதாக இருக்கும்.