மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது.
தற்போது உலகில் வசிக்கும் இந்த வகை ஆடுகளின் பாதி எண்ணிக்கை இந்த ரவிக்குளம்-ராஜமலா வனப்பகுதியில் வசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழிந்து வரும் இந்த வகை ஆடுகளை பார்ப்பதற்காகவே ராஜமலாவுக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் வேறு பல சுவாரசியமான அம்சங்களும் இப்பகுதியில் இருக்கவே செய்கின்றன.
இயற்கை எழில் காட்சிகளும் வளமான பசும் மலைத்தொடர்களும் இப்பகுதியை சூழ்ந்துள்ளன. நீண்ட தாவரப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவற்றை ராஜமலா ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கலாம்.
கடல் மட்டத்திலிருந்து 2700 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் குடும்பச்சுற்றுலா, பிக்னிக் சிற்றுலா மற்றும் தேனிலவுப்பயணம் போன்றவற்றுக்கு மிகவும் உகந்தது.
பொதுவாக பயணிகள் ‘ வரையாடு அல்லது நீலகிரி தாஹிர் எனப்படும் ஆட்டினை பார்ப்பதற்காக வருகை தந்தாலும் சாகச பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள் பாறையேற்றம், மலையேற்றம், சிகரப்பயணம் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.