பாலி நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த நிம்போ கா நாத் எனும் ஸ்தலமாகும். இது ஃபல்னா எனுமிடத்திலிருந்து சந்தேரவ் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
ஹிந்து புராணிக ஐதீகத்தின்படி, மஹாபாரதப் பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பாண்டவர்களின் தாயான குந்திதேவி இங்குள்ள சிவன்கோயிலில் வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.
பயணிகள் ஃபானா எனும் இடம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து உள்ளூர் டாக்சிகள் அல்லது ஜீப் மூலம் இந்த நிம்போ கா நாத் எனும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.