ஆந்திர மாநிலத்திலுள்ள மிகப்பழமையான அணைக்கட்டுகளில் ஒன்றாக இந்த சதார்மட் அணைக்கட்டு பிரசித்தி பெற்றுள்ளது. 1891-92 ம் ஆண்டுகளில் இந்த அணை கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதிலாபாத் மாவத்திலுள்ள கட்டம் மற்றும் கானாபூர் தாலுகாவைச்சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அணை கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
ஷீராம்சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இந்த சதார்மட் அணைக்கட்டு அமைந்துள்ளது. மேலும் இந்த அணைக்கட்டு பகுதியை ஷீராம்சாகர் நீர்த்தேக்கத்துடன் இணைக்கும் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆந்திர மாநில விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அளிக்கும் நோக்குடன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அணைப்பகுதி அமைந்துள்ள இயற்கைச்சூழலின் காரணமாகவே வெகுவாக புகழ் பெற்றுள்ளது. பசுமையான புல்வெளிநிலங்கள் மற்றும் ஸ்படிகம் போன்ற நீர்ப்பரப்புக்கு மத்தியில் அமைதியாக இந்த அணைப்பகுதி வீற்றுள்ளது. எனவே ஏராளமான பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த ஸ்தலத்துக்கு விரும்பி விஜயம் செய்கின்றனர்.