அஹமத்நகரில் மிக முக்கியமான சுற்றுலா அம்சம் இந்த கோட்டையாகும். 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் அஹ்மத்நகரை நிர்மாணித்த அஹமத் நிஜாம் ஷா’வினால் இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது.22 காவல் கோபுரங்களுடன் கூடிய 18 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச்சுவருடன் இந்த கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட எதிரி நாட்டு வீரர்களை அடைத்து வைக்கும் காராக்கிருகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களை அடைத்து வைப்பதற்கும் இது ஆங்கிலேயர்களுக்கு பயன்பட்டிருக்கின்றது என்பது ஒரு முரண்நகையான உண்மையாகும்.
இந்தியாவின் சிற்பியான ஷீ ஜவஹர்லால் நேரு எழுதிய ‘ தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ எனும் நூல் இந்த சிறையிலிருந்த போதுதான் எழுதப்பட்டது என்பது ஒரு முக்கியமான தகவலாகும். இந்த கோட்டை 1559 மற்றும் 1562ம் ஆண்டுகளில் நிஜாம் அரசர்களால் பலவிதமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்தக் கோட்டை இந்திய ராணுவப்படையினரின் கட்டப்பாட்டில் உள்ளது.



Click it and Unblock the Notifications