அஹமத்நகர் ஸ்தாபகர் அஹமத் நிஜாம் ஷா’வின் மகனான பர்ஹான் ஷா’வுக்காக இந்த அற்புதமான நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு வயது மட்டுமே ஆகியிருந்த இளம் வயதில் 1508ம் ஆண்டு தன் தந்தையின் மரணத்தின் காரணமாக இவர் அரியணை ஏறியுள்ளார்.
தன் தந்தையின் எதிரியான விஜயநகர மன்னர்களுடன் பர்ஹான் ஷா கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்ட காரணத்தால் ஆச்சரியப் பிரசித்தமாக வரலாற்றில் அறியப்படுகின்றார். இவர் தன் ஆட்சியின்போது பல போர்களை பிஜாப்பூர் மன்னர்களுடனும் முகலாயர்களுடனும் நிகழ்த்தியுள்ளார்.
ஃபரியா பாக் அரண்மனை எண்கோண வடிவில் அமைக்கப்பட்டு ஒரு குமிழ் கோபுரம் போன்று காணப்படும் பிரம்மாண்ட கூடத்தை கொண்டுள்ளது. பாறாங்கற்களுடன் சாந்து கலந்து பூசி இது கட்டப்பட்டுள்ளது.
நிஜாம் ஷாஹி அரசர்கள் இந்த அரண்மனையை பொழுதுபோக்கு ஸ்தலமாக சதுரங்கம் ஆடுவதற்கும், அருகிலிருந்த ஏரிகளில் நீராடுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.