அஹமத்நகரில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் இடம் இந்த சலாபத் கான் சமாதி மண்டபமாகும். ஷா டோங்கார் எனும் மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 900 உயரத்தில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.
இது சந்த் பீபி மஹால் என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது. தனக்கான சமாதி மண்டபமாக இது சலாபத் கான் மூலமே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1565ம் ஆண்டிலிருந்து 1579ம் ஆண்டு வரை நான்காம் நிஜாம் ஷாவான முர்தாஸா மன்னரின் அவையில் இந்த சலாபத் கான் அமைச்சராக சேவை புரிந்துள்ளார். முர்தாஸா மன்னர் செங்கிஸ் கான் மூலம் மரணமடைந்தது குறித்த வரலாற்றுப்பின்னணியை இந்த சமாதி மண்டபம் நமக்கு எடுத்துரைக்கின்றது.தூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும்படி இந்த மண்டபத்தின் குமிழ் கோபுரம் பிரம்மாண்டமாகவும் கம்பீரமாகவும் விளங்குகிறது. மூன்றடுக்கு கொண்ட ஒரு கூடத்தின் மூலம் இது சூழப்பட்டுள்ளது.
எண்கோண வடிவில் இந்த சமாதி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் உள்ளே சலாபத் கான், அவரது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்கள் ஆகியோரின் கல்லறைகள் காணப்படுகின்றன.