1931ம் ஆண்டு பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் இந்த அலாகாபாத் மியூசியம் எனும் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கிறது. சில அரிய காட்சிப்பொருட்களுக்கு இந்த அருங்காட்சியகம் புகழ் பெற்று விளங்குகிறது.
சந்திர சேகர் ஆஜாப் பார்க் எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சத்துக்கு வெகு அருகே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1947ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் 18 தனித்தனியான காட்சிக்கூடங்கள் உள்ளன.
இவை தொல்லியல், இயற்கை வரலாறு, கலை மற்றும் சுடுமண் படைப்புகள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன. ஜவஹர்லால் நேருவிற்கான சொந்தமான சில பொருட்கள் மற்றும் சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றையும் இங்கு காணலாம்.
காந்தாரம், மதுரா, கோசாம்பி மற்றும் சாரநாத் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த ஓவியங்கள் மற்றும் புராதன கலைப்பொருட்களையும் இங்கு பார்க்கலாம். மற்றொரு சிறப்பம்சமாக இங்கு வைக்கப்பட்டுள்ள குப்தர் மற்றும் குஷாணர் காலத்திய நாணயச்சேகரிப்பை குறிப்பிடலாம்.