அலாஹாபாத் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகம் இந்தியாவில் இருப்பவற்றிலேயே மிகப்பழமையான ஆங்கில மொழி பல்கலைக்கழகமாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது வடக்கு மாகாணங்களின் கவர்னராக இருந்த சர் வில்லிய முயிர் என்ற ஆங்கிலேயர் இந்த பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
முயிர் சென்ட்ரல் காலேஜ் என்று அவர் உருவாக்கிய கல்லூரிதான் காலப்போக்கில் இன்று அலாஹாபாத் பல்கலைக்கழகமாக உருவெடுத்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் இந்த பல்கலைக்கழகம் கல்கத்தா யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கி வந்திருக்கிறது. பின்னர் 1887ம் ஆண்டில் இது தன்னாட்சி கொண்ட பல்கலைக்கழகமாக மாறியது. அத்துடன் இந்தியாவிலேயே நான்காவது நவீன பல்கலைகழகம் எனும் பெருமையையும் அப்போது பெற்றது.
வில்லியம் எமர்சன் எனும் அக்காலத்தில் பிரபல்யமாக இருந்த கட்டிடக்கலை நிபுணர் இந்த பல்கலைக்கழக கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். இவர் கல்கத்த விக்டோரிய மெமோரியலையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோ சராசனிக், எகிப்திய மற்றும் காதிக் பாணி அம்சங்களுடன் இந்த பல்கலைக்கழக கட்டிடம் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications