மார்த்தாண்ட வர்மா பாலம் நவீன திருவிதாங்கூரை நிர்மாணித்தவராக கருதப்படும் திருவிதாங்கூர் மஹாராஜா மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது. இந்தப் பாலம் அருகாமை சாம்ராஜ்யங்களுடன் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 1940 மற்றும் 42-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்ட வர்மா பாலம் கட்டப்பட்ட நாள் முதல் மக்களின் உயிர் நாடியாக போற்றப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் முறை ஆலுவா நகரின் எழில் தோற்றத்தை சுற்றுலாப் பயணிகள் பரிபூரணமாக பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.
மார்த்தாண்ட வர்மா பாலத்தில் 5.5 மீட்டர் அளவில் வாகனப்பாதை மிகவும் பெரிதாகவும், விசாலமானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைப் போன்றே ஒரு பாலம் இதற்கருகில் கட்டப்பட்டுள்ளதால் நவீன கால வாகன நெருக்கடிகளை மார்த்தாண்ட வர்மா பாலம் சந்தித்ததில்லை.
இந்தப் புதிய பாலம் 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்ட நாள் முதலாக ஆலுவா நகரின் தொழில்துறை வளர்ச்சியை அற்புதமாக பிரதிபலித்து வருகிறது.