அமர்நாத் யாத்திரை, இந்துக்களின் அழிவுக் கடவுளான சிவபெருமானின் பக்தர்கள் மேற்கொள்ளும் ஒரு ஆன்மீக யாத்திரையாகும். இந்த யாத்திரை, இந்து காலண்டரின் படி ஐந்தாவது மாதமான ஷ்ரவன் மாதத்தில், ஜம்மு காஷ்மீர் அரசால், ஏற்பாடு செய்யப்படுகிறது.
அமர்நாத் யாத்திரையின் போது, யாத்ரீகர்கள், கடுமையான வானிலைகள் மற்றும் கடினமான மலையேற்றங்கள் போன்ற பலவகை இன்னல்களையும் சந்திக்க நேரிடும். இந்த கடினமான மலையேற்றம் பஹல்கம் நகரிலிருந்து ஆரம்பிக்கின்றது.
அமர்நாத் குகையை நோக்கி மலையேறும்போது, சுற்றிலும் உள்ள அழகிய இயற்கைக் காட்சிகள், யாத்ரீகர்களை வசியம் செய்கின்றன. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் தவிர்த்து, வருடந்தோறும், பனியால் மூடப்பட்டே காணப்படுகிறது. இதனால், இக்கோயில், பனி இல்லாத இந்த சில மாதங்களில் மட்டுமே திறந்து வைக்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications