பீமாஷங்கர் கிராமத்திலேயே அமைந்துள்ள இந்த பீமாஷங்கர் கோயில் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள புனித ஜோதிர்லிங்க கோயிலாகும். நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோயில் நாட்டிலுள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் - மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே அமைந்துள்ள ஐந்து ஜோதிர்லிங்க கோயில்களில் - ஒன்றாகும்.
புராண ஐதீகத்தின்படி இந்த சஹயாத்திரி மலைகளில் சிவபெருமான் பீமா அவதாரமெடுத்து திரிபுராசுரன் எனும் அசுரனைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. அசுரனோடு நிகழ்த்திய போரின்போது சிவபெருமான் உடலில் பெருக்கெடுத்த வியர்வை பீமா எனும் புனித ஆறாக பெருக்கெடுத்து ஓடியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த புனித ஜோதிர்லிங்க கோயில் நகரா கோயில் சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 13ம் நூற்றாண்டைச்சேர்ந்த சில ஆவணங்களும் காணப்படுகின்றன.
மேலும், இந்த கோயில் வளாகத்தில் ஒரு சிறிய ஷானி கோயிலும் அதனருகில் ஒரு பெரிய மணியுடன் அமைந்துள்ளது. இந்த விசேஷ அமைப்பு ஹேமந்த்பதி பாணி சிற்பக்கலை அம்சத்தை காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆன்மீக திருத்தலம் ஆன்மீக யாத்ரீகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக அறியப்படுகிறது. மஹா சிவராத்திரி மங்கல நாளின் போது இக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.