இந்த தெப்சாரி அணை அமைந்துள்ள நீர்த்தேக்கம் போர்டி பகுதியிலேயே மிகப்பெரிய ஏரியாகும். இங்கு நீரை தேக்கி வைப்பதற்காக இந்த தெப்சாரி அணை கட்டப்பட்டுள்ளது. அஸவ்லி அணையைவிட இது அளவில் மிகப்பெரியதாக உள்ளது.
ஆரோக்கியமான அமைதியான சுற்றுப்புறச் சூழலைக் கொண்டுள்ளதால் இந்த அணைப்பகுதி ஒரு பிரசித்தி பெற்ற சிற்றுலா ஸ்தலமாக அறியப்பட்டுள்ளது.
இங்குள்ள ஏராளமான மரங்கள் இந்த பிரதேசத்துக்கு பசுமையான இயற்கை அழகினை அளித்து ஒரு சிறப்பான சுற்றுலாத்தலமாகவும் ஆக்கியுள்ளன.அழுத்தம் நிறைந்த நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு மாற்றத்துக்காக பயணிகள் இங்கு தங்கள் குடும்பத்தாருடன் வருகை தரலாம்.