பி.ஆர் மலைக்கு விஜயம் செய்யும் பயணிகள் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த பிலிகிரி ரங்கஸ்வாமி கோயிலுக்கு விஜயம் செய்வது அவசியமாகும். இந்த கோயில் வெங்கடேஸ்வர பகவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள ரங்கநாதர் கோயில்கள் யாவற்றிலும் காணப்படாத அதிசயமாக இங்கு ரங்கநாதர் சிலை நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் துணைவியாராகிய ரங்கநாயகி சிலையும் இங்கு இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த கொயிலில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.ஷீவைஷ்ணவ பிரிவினரின் முக்கியமான கோயிலான இங்கு உள்ளூர் ஆதிவாசிகள் மூலம் தோல் பாதணிகள் (1அடி 9 அங்குலம் நீளம்) இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஷீ ரங்கநாதருக்கு சமர்ப்பிக்கப்படுவது ஐதீகமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் வரும் விசாக நாளின்போது இங்கு ஒரு தேர்திருவிழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. அச்சமயம் நாடெங்கிலுமிருந்து பக்தர்களும் பயணிகளும் இங்கு குழுமுகின்றனர்.



Click it and Unblock the Notifications