பி.ஆர் மலைக்கு வருகை தரும் பயணிகள் தவறவிடக்கூடாத அம்சம் இந்த தொட்ட சம்பிகே மரா ஆகும். இந்த பெயருக்கு பெரிய சம்பக மரம் என்பது பொருள். 20 மீட்டர் அகலமும் 34 மீட்டர் உயரமும் கொண்டதாக இந்த பிரம்மாண்ட மரம் அமைந்துள்ளது.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி இதன் வயது 2000 ஆண்டுகள் என்று கருதப்படுகிறது. பி.ஆர் மலையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கோயிலில் இந்த தொட்ட சம்பிகே மரா அமைந்துள்ளது. இந்த மரத்துக்கருகில் பல சிவலிங்கங்களையும் பயணிகள் பார்க்கலாம்.சோளிகர் எனும் பழங்குடி இனத்தவர்க்கும் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் இந்த தொட்ட சம்பிகே மரா முக்கியமான மரபுச்சின்னமாக விளங்குகிறது. சிவப்பும் மஞ்சளும் கலந்த மலர்கள் இந்த மரத்தில் பூத்து குலுங்குகின்றன.
வேர்களை போன்ற விழுதுகள் இம்மரத்திலிருந்து தொங்குவதால் இது சிவனுடன் ஒப்பிட்டு வணங்கப்படுகிறது. சோளிகர் இனத்தாரால் இந்த மரம் மஹாசிவராத்திரியின் போது நெருப்புத்தாண்டவம் புரிகின்ற சிவபெருமானாகவே வணங்கப்படுகிறது.சோளிகர் இன பழங்குடியினரின் பண்பாட்டு அடையாளத்தையுக் இயற்கையோடு இயைந்த அவர்களது வாழ்வியல் அம்சங்களையும் பிரதிபலிப்பதாகவே இந்த தொட்ட சம்பிகே மரா விளங்குகிறது.
காவிரி ஆற்றின் துணை ஆறாகிய பார்கவி ஆறு இந்த மரத்திலிருந்து ஊற்றெடுப்பதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. மற்றொரு உள்ளூர் நம்பிக்கையின்படி இந்த ஓடையானது பிரசித்தி பெற்ற ஜமதக்னி முனிவரின் துணைவியான ரேணுகாவை குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.