சிதம்பரம் நகரில் நடராஜர் கோயிலுக்கு அடுத்தபடியாக இந்த தில்லைக்காளியம்மன் கோயில் முக்கியமான ஆலயமாக பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் நான்கு முகங்களுடன் ரௌத்திர கோலத்தில் காட்சியளிக்கிறது.
சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே யார் பெரியவர் என்ற கருத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது பார்வதி வெகுண்டு இந்த ரௌத்திர ரூபம் கொண்டதாக ஐதீகம். பின்னர் பிரம்மாவின் தவத்திற்கு இணங்கி தில்லைக்காளியான பார்வதி தேவி சாந்தமடைந்ததாக புராணிகம் கூறுகிறது.
உள்ளூர் பக்தர்கள் மத்தியில் தில்லைகாளியம்மன்கோயில் ‘திலையம்மன் கோயில்’ என்ற பெயரில் பிரசித்தமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தில்லை எனப்படும் சிதம்பரம் நகரை காக்கும் தெய்வமாகவே தில்லைக்காளியம்மன் அறியப்படுகிறார்.