எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த காளிகா மாதா கோயில் சித்தோர்கர் பகுதியின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாகும். சிசோடியா வம்சத்தைச் சேர்ந்த பப்பா ரவால் என்ற மன்னர் இந்தக் கோயிலை சூரியக்கடவுளுக்காக எழுப்பியுள்ளார். இருப்பினும் 14ம் நூற்றாண்டில் மஹாராணா ஹமீர் சிங் இதனுள்ளே காளிகா மாதாவின் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.
அதிலிருந்து இது காளிகா மாதா கோயில் என்றே பிரசித்தமாக அறியப்படுகிறது. சக்தி மற்றும் வீரத்தின் அடையாளமாக கருதப்படும் காளிகா மாதா தெய்வம் சித்தோர்கர் நகரின் காவல் தெய்வமாகவே வணங்கப்படுகிறது.
இக்கோயில் மிக அழகான கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்ப வடிப்புகளை கொண்டுள்ளது. இங்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு காளிகா மாதாவின் அருளைப்பெற ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.