விஜய ஸ்தம்பம் அல்லது வெற்றிக்கோபுரம் என்றழைக்கப்படும் இந்த பிரபலமான சுற்றுலா அம்சம் சித்தோர்கர் நகரில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தை மஹாராணா கும்பா மன்னர் 1440 ஆண்டு கட்டியுள்ளார்.
இந்த கலையம்சம் கொண்ட அமைப்பு முகமது கில்ஜியை வெற்றிகொண்டதன் அடையாளமாக எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 37 மீட்டர் உயரங்கொண்ட இந்த கோபுரம் 9 தளங்களை கொண்டுள்ளது.
ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இதன் சுவர்களை அலங்கரிக்கின்றன. ராமாயண மற்றும் மஹாபாரத இதிகாச நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அற்புதமான மற்றும் நுணுக்கமான சிற்ப வடிப்புகளை இதனுள்ளே பார்க்கலாம். இதன் உச்சியிலிருந்து நகரத்தின் அழகை கண்களால் பருக முடிவது மற்றொரு இனிமையான அனுபவமாகும்.