கீர்த்தி ஸ்தம்பம் என்றழைக்கப்படும் இந்த ஜைன மரபுக்கோபுரம் 22 மீட்டர் உயரமும் ஏழு தளங்களும் கொண்ட கோபுரமாகும். இது முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
சோலங்கி கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள கீர்த்தி ஸ்தம்பம் பலகணிகள் மற்றும் அழகிய சுவர்ச்சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்தம்பத்தின் சுவர்களில் பயணிகள் ஜைன தீர்த்தங்கரர்களின் உருவங்களை காணலாம்.
இந்த ஸ்தம்பத்தின் இரண்டாம் தளத்தில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள ஆதிநாதர் சிலை காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலின் ஏழாவது தளத்திலிருந்து சித்தோர்கர் நகரின் அழகை உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications