புனித ஜார்ஜ் ஆலயம் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஜே.டி .போய்லியூ அவர்களால் வடிவமைக்கப்பட்டு 1826ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆழமான காவி ஸ்டக்கோ மற்றும் வெள்ளை நிறத்தில் விலை உயர்ந்த கல் முதலியவை பதித்து அழகுபடுத்தப் பட்டுள்ளது.
ஆலயத்தின் உட்புறம் செல்ல ஒரு நடையைக் கடந்து செல்ல வேண்டும். இதன் அமைப்பு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது . மாடத்துடன் அமைந்த கூரை, உயரமான தூண்கள் மற்றும் கம்பீரமான சிலைகளுடன் அழகாகக் காட்சியளிக்கிறது .
இந்தியாவில் காணப்படும் அரிய கட்டிடங்களில் ஒன்று புனித ஜார்ஜ் ஆலயம். இது கிட்டத்தட்ட முழுவதும் வெள்ளை மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மரங்களுக்கிடையில் அமைந்திருப்பது இங்கு கிடைக்கும் அமைதியான சூழ்நிலைக்கு காரணமாக இருக்கலாம் . குன்னூருக்கு அருகில் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது.