சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று அனுபவிக்கும் வாய்ப்புகளை வழங்கக் கூடிய ஒரே இடமான சீதாபனி பறவைகளை கவனிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் வால்மீகி கோவில் மற்றும் ஆற்றைக் காண முடியும்.
இந்த ஆற்றின் கரையில் பல்வேறு ஊர்வன விலங்குகளையும் காணலாம். புராணங்களின் படி, இராமரின் மனைவியான சீதா தேவியை இராமர் ஒதுக்கி வைத்த போது அவர் சில நாட்கள் இங்கே தங்கியிருந்திருக்கிறார்.
இந்த இடம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இவ்விடம், புலிகள், யானைகள், மான்கள், சம்பார், குரைக்கும் மான்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் ராஜநாகங்கள் இயற்கையாகவே வசித்து வரும் இடமாகும்.
சீதாபனி வனத்துறையினர் இங்கே யானை சவாரி செய்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து தருகிறார்கள்.



Click it and Unblock the Notifications