தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில் எனப்படும் இந்த குகைக்கோயில் சிவபெருமானுக்கான கோயிலாகும். டேராடூன் நகர பேருந்து நிலையத்திலிருந்து 5.5 கி.மீ தூரத்தில் உள்ள இது ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.
தபக் எனும் சொல்லுக்கு ஹிந்தியில் சொட்டுவது என்பது பொருளாகும். இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின்மீது நீர் சொட்டிக்கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது.
புராணிகக்கதையின்படி, இந்த குகைக்கோயிலிலிருந்து துரோணச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமாவுக்கு சிவபெருமான் பால் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. தவிர இந்த கோயிலைச்சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகளும் காணப்படுகின்றன.
இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவராத்திரி திருநாளின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். அந்நாளில் இந்த கோயிலில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கான திருமணச்சடங்கு நிறைவேற்றப்படுகிறது.