தேவ்பிரயாகின் பழங்கால கோவில்களில் ஷாந்தா நதியின் கரையில் இருக்கும் தஷ்ரத்ஷிலா கோவில் முக்கியமானதாகும். இந்து புராணங்களின் படி ராமனின் தந்தையான தசரத மன்னர் இங்கு தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் சிறிய கல் மன்னரின் அரியணையாக மக்களால் கருதப்படுகிறது.