சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தரி மாவட்டத்தில் உள்ள இந்த சீதாநதி காட்டுயிர் சரணாலயம் இந்தியாவிலுள்ள காட்டுயிர் சரணாலயங்களிலேயே மிக முக்கியமான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.
இந்த சரணாலயத்தின் மையப்பகுதியின் ஓடும் சீதாநதியின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த காட்டுயிர் சரணாலயம் அற்புதமான இயற்கை வளத்தையும் ஏராளமான காட்டுயிர் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
சால் மரம், தேக்கு மரம் மற்றும் காட்டு மூங்கில் மரம் போன்றவை இந்த வனப்பகுதியில் மிகுதியாக வளர்ந்துள்ளன. புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் இதன் உள்ளே வசிக்கின்றன. பல்வேறு பறவை இனங்களையும் இது அதிகமாக கொண்டுள்ளது.