தர் நகரத்திலிருந்து 97 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாக்ஹ் குகையை மத்தியப் பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த குகையில் இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் அஜந்தா குகையை நினைவு படுத்தும் வகையில் இருக்கும்.
இந்த குகைகள் 9 நினைவுச் சின்னங்களின் குவியலாகும். இந்த குகை பாறைகள் குடைந்து உருவாக்கப்பட்டவை. சுவர் ஓவியங்களுக்கு புகழ் பெற்ற இந்த குகை, இந்தியாவின் பாறை வெட்டும் கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
அஜந்தா குகைகளை போல ஒரு நதிக்கரையில் இருந்த பாறையை குடைந்து உருவாக்கப்பட்டவை தான் இந்த குகை. இந்த குகையில் குப்தா காலத்து பாகினி மற்றும் புத்த மத வாழ்க்கை முறையின் அகத் தூண்டுதல் நன்றாக தெரியும்.
இந்த குகை பார்ப்பதற்கு புத்த விஹாரம் அல்லது மடத்தை போல் இருக்கும். உள்ளே சிறு அறைகளும் வழிப்பாட்டு அறையும் உள்ளது. வரலாறு மற்றும் தொல்பொருள் மேல் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய இடம் இது என்று எந்த வித சந்தேகமின்றி கூறலாம்.