தர்மஷாலாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள இவ்விடம் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக புகழுடன் உள்ளது. இது பொடாலா பாலஸ் என்று வேறு பெயரில் அழைக்கப்படுகிறது.
தலாய் லாமா நாடு கடத்தப்பட்ட போது, இங்குள்ள நம்கியால் மடாலயத்தில் தங்கியிருந்தார். இங்கு பல மாடிக்கட்டிடங்கள் உள்ளன. மடாலயத்தை தவிர, இந்த பல மாடிக் கட்டிடங்களில், கோயில்கள், புத்தகக் கடைகள், காபி ஷாப்புகள், ஸ்தூபிகள் மற்றும் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.
ஒரு மூன்று மீட்டர் உயர சாக்கியமுனி புத்தரின் சிலை இந்த கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ளது. சாக்கியமுனியை கௌதம புத்தர் என்றும் அழைப்பர். புத்த ஞானம் பெற்ற அவலோகிதேஸ்வரா மற்றும் பத்மசாம்பவரின் அழகிய சிலைகளும் இக்கட்டிடத்தில் உள்ளன.



Click it and Unblock the Notifications