தர்மஸ்தாலாவின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மஞ்சுஷா அருங்காட்சியகம். இது மஞ்சுனாதேஸ்வரர் கோயிலுக்கு தெற்கில் இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டையகால பொருட்களான போர் வாள், பழைய தட்டச்சுகள் மற்று கேமராக்கள், இரும்பினால் செய்யப்பட்ட வேத நூல்கள், பனை ஓலையில் எழுதப்பட்ட சுவடிகள், நகைகள், மைசூர் ஓவியங்கள் போன்றவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர மஞ்சுனாதேஸ்வரர் கோயிலின் வரலாற்றை சொல்லும் புத்தகம் ஒன்றும், வித்வான் வீணை சேஷண்ணா அவர்களுக்கு சொந்தமான 300 ஆண்டு கால பழமையான வீணையும், மௌரிய கால டெர்ரகோட்டா காசுகளும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், கர்நாடகாவின் பல்வேறு கோயில்களிலிருந்து பெறப்பட்ட தேர்கள் மஞ்சுனாதேஸ்வரர் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. மஞ்சுஷா அருங்காட்சியகம் காலை 10 முதல் 1 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 9 மணி வரையிலும் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications