டிக்பாய் நகரில் அமைந்திருக்கும் டிக்பாய் ஆயில் செண்டினரி மியூசியம், இந்தியாவில் அஸ்ஸாமில்தான் முதன் முதலாக எண்ணை இருப்பது கண்டறியப்பட்டது என்பதன் சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
அதோடு இந்தியாவின் முதல் எண்ணை சுத்திகரிப்பு மையமான டிக்பாய் எண்ணைக் கிணறு இந்த மியூசியத்திற்கு வெகு அருகிலேயே உள்ளது. மேலும் டிக்பாய் ஆயில் செண்டினரி மியூசியம் 2002-ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஆயில் கார்ப்பரேஷனால் தோற்றுவிக்கப்பட்டது.
டிக்பாய் ஆயில் செண்டினரி மியூசியத்தில் பழைய இயந்திரங்களும், குழாய்களும் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் எண்ணை சுத்திகரிப்பின் வளர்ச்சியை எடுத்துச் சொல்லும் சில புகைப்படங்களையும் இங்கே பார்க்க முடியும். இவைதவிர நவீன தொழில்நுட்பம் குறித்த தகவல்களையும் இந்த மியூசியம் தருகிறது.