அசாமின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் டின்சுகியா மாவட்டத்தில் பழைய எண்ணைக் கிணற்றிற்காக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் டிக்பாய் உள்ளது. 1901ல் இருந்து இங்கிருக்கும் எண்ணைக் கிணறுகள் செயல்பட ஆரம்பித்ததால் அப்போதிருந்து ஆங்கிலேயர்களின் இருப்பு இங்கு துவங்கியது. மிக அதிகமான ஆங்கிலேயர்களால் சுதந்திரத்திற்கு 60ஆண்டுகள் பின்பும் இன்னமும் இங்கு ஆங்கிலேய பாதிப்பு இருப்பதைக் காணலாம்.
டிக்பாய் நகரின் சுற்றுலா தலங்கள்
டிக்பாய் எண்ணைக் கிணறுதான் முக்கியமான சுற்றுலா தளம் என்றாலும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட 18-குழிகள் கொண்ட கோல்ப் மைதானமும் பயணிகளிடையே அசாமின் மேற்பகுதியில் புகழ்பெற்று விளங்குகிறது.
மேலும் சைகோவா தேசிய பூங்கா, ரித் பாயிண்ட் (முகடு கோணம்), யுத்த கல்லறை ஆகியவையும் இங்கு புகழ்பெற்ற சுற்றுலாதளங்களாக விளங்குகின்றன.
டிக்பாய் பயணிக்கும் வழிமுறைகள்
டிப்ருகார்ஹ் விமானமுனை டிக்பாய்க்கு அருகாமையில் உள்ளதாகும். அதேபோல் டின்சுகியா ரயில்முனை டிக்பாய்க்கு அருகில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 38 நாட்டின் மற்ற இடங்களுடன் இந்த எண்ணய் நகரத்தை இணைக்கிறது.
டிக்பாய் வானிலை
மிதமான பருவமழை வானிலை டிக்பாயில் நிலவுகிறது. மேலும் கோடை, மழை, குளிர் என மூவகை பருவங்களும் நிலவுகிறது. கோடைகாலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமும், மழைக்காலத்தில் தேவையான அளவில் மழையும், குளிர்காலத்தில் பனியுடன் கூடிய குளிரும் நிலவுகிறது.