டிக்பாய் எண்ணைக் கிணறு இந்தியாவின் முதல் எண்ணை சுத்திகரிப்பு மையமும், உலகின் பழைய கிணறுகளில் ஒன்றும் ஆகும். 1901ல் உருவாக்கப்பட்ட இவ்விடம் வருடத்திற்கு 0.65மெட்ரிக் டன் எண்ணையை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்கிறது.
இந்திய எண்ணைக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த கிணறு க்ரூட் எண்ணையில் இருந்து மெழுகை பிரிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறது.
டிக்பாயின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இவ்விடம் விளங்குகிறது. நூறு வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இவ்விடத்தில் எண்ணை உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதை பயணிகள் கண்டுகளிக்கலாம்.
பொதுமக்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லையென்றாலும் சிறப்பு அனுமதி பெற்று செல்லலாம்.
கடந்த ஆண்டுகளில் டிக்பாய் எண்ணைக் கிணற்றை புதுப்பிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சால்வண்ட் டி-வேக்சிங் யூனிட் மற்றும் மெழுகு-ஹைட்ரோ ஃபினிஷிங் யூனிட் ஆகியவை இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பகுதிகளாகும்.