ஹிந்துக்கள் மத்தியில் முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக அறியப்படும் தும்கா நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது. சரையாஹாத் வட்டத்தில் உள்ள இந்த பாபா சுமேஷ்வர் நாத் இப்பகுதியில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலமாகும்.
இது தும்கா நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. பாபா சுமேஷ்வர் நாத் ஸ்தலத்தில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான சிவன் கோயிலுக்கு தினமும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
திருவிழாக்கள் மற்றும் திருநாட்களின் போது உள்ளூர் மக்கள் திரளாக இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர். மஹாசிவராத்திரி திருநாள் இக்கோயிலில் விமரிசையான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
சிரவண மாதத்தின் போதும் இங்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஹிந்து நம்பிக்கைகளின்படி சிரவண மாதம் சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
புனித கங்கை நீரால் சுமேஷ்வர்நாதருக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் பூஜைச்சடங்குகள் போன்றவை இக்கோயிலின் முக்கிய அம்சங்களாக பக்தர்களால் தரிசிக்கப்படுகின்றன.