ஜார்கண்டின் 24 மாவட்டங்களில் ஒன்றான ராம்கார்ஹ் முக்கியமான சுற்றுலாத் தளமாகும்.2007ஆம் ஆண்டு செப்டம்பர்12ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மாவட்டம் அதற்கு முன்பு ஹஜாரிபாகின் பகுதியாக இருந்தது. ராமரின் கோட்டை என்ற அர்த்தத்தில் ராம்கார்ஹ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ராம்கார்ஹ், பட்ராடு, கோலா, மண்டு, சித்ராபூர், டுல்மி என ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் வரலாறு கற்காலம் வரை நீள்கிறது. குப்த, இஸ்லாமிய மன்னர்களின் சுவடுகள் இங்கே கிடைத்துள்ளன.
தாது வளம் நிறைந்த இங்கு எரிசக்தி மையம் ஒன்று அறுபதுகளில் உருவாக்கப்பட்டது. செடி மற்றும் பலவகையான விலங்குகளுக்கும் இந்த இடம் புகழ்பெற்று விளங்குகிறது.
அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
டூடி ஜர்னா கோவில், மாயதுங்க்ரி கோவில், ராஜ்ரப்பா கோவில் போன்ற மத தளங்களும், துர்துரியா நீர்வீழ்ச்சி, அம்ஜாரியா நீர்வீழ்ச்சி, நைகரி அணை, கந்துனியா வெநீர் ஊற்று, பங்கெட்டா மற்றும் பல இயற்கை தளங்களும் உள்ளன.
வரலாற்றுப் பெருமை மிக்க மகாத்மா காந்தியின் பூத உடலின் மிச்சங்கள் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்து சாத்தல் இங்கு உள்ளது. சீன கல்லறை என்ற உலகப்போரில் மடிந்த வீரர்களின் கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாது புத்த கோவில் ஒன்றையும், நினைவுத் தூண் ஒன்றையும் காணலாம்.
ராம்கார்ஹ் வானிலை
சோடாநாக்பூர் பீடத்தில் உள்ள இடத்தில் மித வெப்பமண்டல வானிலை நிலவுவதால் கோடையில் வெயிலும், குளிரிகாலத்தில் குளிரும் மிதமாகவே உள்ளன.
ராம்கார்ஹின் பெருமைமிகு கலாச்சாரம்!
தீபாவளி, ஹோலி, தசரா, ராமநவமி, ஈத், மகசங்கராந்தி என பலவகையான விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. விஷ்கர்ம பூஜா என்ற விழா இங்குள்ள தொழிற்சாலைகளுக்காகவும், சுரங்கங்களுக்காகவும் கொண்டாடப்படுகிறது.
உள்ளூர் உணவு வகைகளை பயணிகள் சுவைத்து மகிழலாம். பூக்கள் மற்றும் இலைகளையும் சமைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். ராஜ்ரப்பா மந்திரில் கிடைக்கும் கோயா பேடா புகழ்பெற்ற இனிப்பு வகையாகும்.
ராம்கார்ஹ் அடையும் வழி
பலவகை போக்குவரத்துகளும் இருப்பதால் ராம்கார்ஹ் பயணிப்பது சுலபமாகும். கிழக்கு ரயில், தெற்கு ரயில் என ரயில்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பிர்ஸா முண்டா விமான நிலையம் டெல்லி, பாட்னா, மும்பை, கொல்கட்டா ஆகிய நகரங்களை இணைக்கிறது.